தோழி
கடலோரம் கரைமோதும் அலையைப்போல
உன்நினைவலைதான் என்றென்றும் நெஞ்சினிலே
உடலெல்லாம் அலங்கார
ஊர்தியைப்போல்
எந்நெஞ்சக் குடிலில் அமர்ந்தவள்நீ
அன்பிலே எனை நனைத்து
குளிரில் வாட்டியவள் நீ
பண்பிலே எல்லாம்
வென்று – என்
பண்ணிலே பொருளாய் நின்றாய்.
சொல்லிலே தாகம்
வந்தால்
எழுத்திலே காட்டி நின்றாய்
கண்ணிலே கண்ணீர்
வந்தால் – அதில்
ஒரு துளியாய் நீயுமானாய்
மண்ணிலே வாழும்
எல்லாம்
மாண்புமிகு பெற்றார் இல்லை
உன்னிலே சேர்ந்த
பின்தான் – என்
மெய்யும் உயிரும் உயிர்பெற்றது.
இருகண்ணில் ஒருகண்ணாய் ஆனவள்நீ
மறுகண்ணில் தூசுவிழுந்தால் துடைத்தவள்நீ
என்னிலொரு நட்சத்திரமாய்
தோன்றினவள்நீ
மென்மையிலொரு மலராய் பூத்தவள்நீ
வருகையிலே நிழலென
வந்தவள்நீ – என்
வறுமையிலும் பங்கேற்றுக் கொண்டவள்நீ
சமத்துவத்தில்
சன்மார்க்கம் கண்டவள்நீ
Comments
Post a Comment