திருப்பூர் குமரன்
முந்நூறு நாளில் கருசிறை முடங்கி
விடுதலை
யானவர் ஒருவர் – அவர்
நிலைபெறும்
கோடி மக்களில் சிறந்து
தலைதந்து
காத்த புனிதர்.
மழலைப்
பருவத்தில் ஏழைத் தாயின்
மடியில்
வளர்ந்தவர் அவரே – வளர்ந்து
இருமூன்று
வயதில் ஆரம்பப் பள்ளியில்
அறிவைப்
பெற்றவர் அவரே.
இருபது
வயதில் பல்லாண்டு வாழ
வழியைக்
கண்டவர் அவரே – உள்ள
பல்மொழி
இனத்தை ஓரினம் ஆக்க
நலம்படச்
செய்ததும் அவரே.
அன்பும்
பண்பும் அமைதியும் நிறைந்த
ஆண்மை
உள்ளவர் அவரே – பிறந்த
தாய்நாட்டின்
மானத்தைத் தரணிபோற்றிட
உயர்த்திடக்
கொடுத்ததும் தலையே.
உயிரைக்
கொடுத்தும் கொடியைக் காத்து
வெள்ளையன்
சிந்திக்க வைத்தே – அவர்
பாரில்
பாரத நாட்டின் பெருமையை
ஓங்க
வைத்துமே உயர்ந்தார்.
தணிகை
மலையில் திகழ்ந்திடும் குமரன்
தமிழரின்
கடவுள் என்போம் – அவ்விறை
பெயர்பெற்ற
திருப்பூர் குமரனும்
திருவருள்
பெற்றவர் என்போம்.
விடுதலை
அடைந்த பாரத நாட்டை
வழிநடத்திச்
செல்வோர் வகிக்கும் கொள்கை
கொடிபிடித்து
நாமும் நாட்டின் சுதந்திரம்
பேணிக்
காப்போம் வாரீர்.
Comments
Post a Comment