கடமை 2

 கனிகளின் கூட்டு பஞ்சா மிர்தம்

கால்களின் கூட்டு தேவா மிர்தம்

எழுத்தின் கூட்டு சொற்கள் ஆகுமே

ஏட்டின் கூட்டு புத்தகம் ஆகுமே

வரியின் கூட்டு பக்கம் ஆகுமே

வரியின் சேர்க்கை மண்ணெய்ப் பெருக்குமே

மேகத்தின் கூட்டு வானம் ஆகுமே

கேமத்தின் கூட்டு மழையும் வருமே

மழைத்துளியின் கூட்டு வெள்ளம் ஆகுமே

வெள்ளத்தின் கூட்டு கால்வாய் ஆகுமே

கால்வாயின் கூட்டு ஆற்றோடை ஆகுமே

ஆற்றோடையின் கூட்டு கடலாகுமே

அவற்றை எல்லாம் மனதில் நிறுத்துவோம்.

மேலும்,

(வேறு)

துறப்போம் மறப்போம் விழிப்போம் நாட்டில்

          துன்பம் எங்கும் பறக்கவே

இனிப்பும் காரமும் வாழ்வின் சாரம்

          இனிமை பொங்கிட வாழ்வோமே.

இரவும் பகலும் நாட்டின் ஈரல்

          இரவலும் கொடுத்தலும் நம் கடமையே

தமிழின் பெருமை நாட்டின் பெருமை

          தமிழர் கடமை இது வாகுமே.

 

சூரியனின் நன்மை நாட்டில் வெளிச்சம்

          அரியவன் நன்மை தர்மமே

சந்திரனின் நன்மை நாட்டின் குளிர்ச்சி

          சமூத்திரத்தின் நன்மை உப்பாகுமே

ஒளியெலாம் வீசிடும் இடத்தின் நன்மை

          ஒளிமய மான வாழ் வாகுமே

மண்ணின் கடமை நம்மைச் சுமப்பதுநல்

          மனம்கொண் டவர்மனதில் நிலைப்பதுவே.

 

விலங்கின் பெருமை காட்டில் என்றால்

          மனிதனின் பெருமை நாட்டிலன்றோ

ஊர்தியின் பெருமை சாலையில் என்றால்

          ஊர்வனர் பெருமை அதிலன்றோ

ஊரின் பெருமை நாட்டின் பெருமை

          உலகத்தின் பெருமை உழவனே.

நாட்டின் ஈரல் உழவனின் வேலை

          பசியின் தாயும் உழவனே.

 

தாயின் பெருமை குழந்தை யுடனே

          தர்மம் பெருகும் நாட்டினிலே

தாயின் சொல்லே பிள்ளையின் கடமை

          தாய்மை வாழும் இடத்தினிலே

கல்வியின் பெருமை பள்ளிக் கூடத்திலே

          கள்வனின் மனமும் திருந்தினவே

நெசவின் வேலை துணியா குமேஅதன்

          நெஞ்சில் எல்லாம் பசுமையே.

 

மஞ்சு வளர்ந்ததோ மலைகா டுகளில்

          இஞ்சகரம் பெற்ற பயனெலாம்

வீட்டிலோ நெல்லவிழ்க்க வீதியெலாம் நிழல்தர

          விழ்ந்திட்டு பயன் அளிப்பதுவே

புல்என்று மிதித்து அதன்மேல் நடந்திட

          புல்லென்று வந்திடும் பசுபோல

இயற்கை உதவும் பயனை எல்லாம்

          செயற்கைச் செல்வம் பெற்றவ னெங்கே.

 

இவனேழை என்று கூறும் இரக்கம்

          இல்லாத மாக்கள் நெஞ்சம்

அம்மாக்கள் ஒவ்வோர் சொல்லின் பயன்

அம்மானின் வாழ்வில் தேய்பிறையே

தானேழை என்று கூறும் பங்காளன்

          தானே வந்துழைத் திடுவான்

இவனுரைக்கும் ஒவ்வோர் சொல்லின்பயன்

          இவன் வாழ்வில் வளர்பிறையே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்