நிலை நாட்டு

 


ஆடிவரும் தென்றலைக் கண்டேன் – அத்துடன்

          அசைந்துவரும் பெண்ணைக் கண்டேன்

பாடிவரும் குயிலைக் கண்டேன் – அத்துடன்

          ஆடிவரும் மயிலைக் கண்டேன்

கரைமோதும் அலையைக் கண்டேன் – அத்துடன்

          காத்திருந்த இருவிழிகளைக் கண்டேன்

உதிக்கும் சூரியனைக் கண்டேன் – அத்துடன்

          மறையும் அதனழகைக் கண்டேன்.

 

ஒளிவீசும் அழகைக் கண்டேன் – அத்துடன்

          ஒளிர்ந்திடும் பயிர்வளத்தைக் கண்டேன்

வீசிடும் தென்றலைக் கண்டேன் – அத்துடன்

          வீழ்ந்திடும் மழையையும் கண்டேன்

பெருகியோடும் ஆற்றைக் கண்டேன் – அத்துடன்

          பெருகிவரும் மக்களைக் கண்டேன்

ஓடிவரும் மழலையைக் கண்டேன் – அத்துடன்

          ஒளிந்துக் கொள்ளும் அழகைக் கண்டேன்.

 

ஓடிவரும் எலியைக் கண்டேன் – அத்துடன்

          ஒழித்துவிடும் பூனையையும் கண்டேன்

சுத்திவரும் பூனையைக் கண்டேன் – அத்துடன்

          காத்திருக்கும் நாயையும் கண்டேன்

ஆப்பம் திண்ணகதை கேட்டேன் – அத்துடன்

          நாடு காக்கும் முறையைக் கண்டேன்

ஏப்பமிடும் மனிதரைப் பார்த்தேன் – அத்துடன்

          ஏமாந்து நிற்கும் மனிதரைக் கண்டேன்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்