பனித்துளிகள்
விடிகின்ற காலையில் இமயம் சென்றேன்
விழிக்கின்ற இடமெல்லாம் பனித்துளிகள்
கடந்தஇடம் காணா
திகைத்து நின்றேன்
கழியுமிடம் தெரியுது அம்மட்டோ
அடியேனைச் சுற்றிலும்
அருமை நண்பர்
அடியேனை அன்பால் அரவணைத்தனர்
பிடிவருமுன் னேமணி
யோசை வருது
பணியாள்போகும் பின்னே துகள் வருது.
நானமைதியாய் அமர்ந்தேன்
உன்னைச் சின்னாள்
நான்விட்டதில்லை என்றன வான்பூச்சிகள்
வான்பூச்சியின்
சத்தம் கேட்டு நாட்டில்
வான்மகளாய்த் தோன்றி னாள்பானு
பூசையறையில் பருத்தஉரு
ஒன்று வந்தால்
பூசாரிதான் என்ன செய்வானாம்
பூக்குமேலையில்
கதிரவன் வந்தால் யானோ
புத்தாளன் என்ன
செய்வேனாம்.
Comments
Post a Comment