காதல் வாசல்

 


முதுகலை படிக்கையிலே

        எதிர்வீட்டுக் கன்னியவன்

புதிராய் நின்றிருப்பாள் – சன்னல்

புதரில் மறைந்திருப்பாள்.

          முதல்சந்திப்பே நிறுத்தத்தில்

          விருத்தத்தில் நானிருந்தேன் – அவள்

                    விருப்பத்தில் நானிருந்தேன் – வான்

                    கருக்களில் நான்விழுந்தேன்.

          ஒப்பிலா அழகுடையவள் – தினம்

          ஒப்பனையில் திகழ்ந்திடுவாள்

                    சத்தான அவள்பேச்சில்

                    முத்தான முத்துதிரும்

          பேருந்தில் போகும்போது

          பல்காட்டி தலையசைப்பாள் – என்

                    கண்மட்டும் விடைகொடுக்கும்

                    மனம்மட்டும் விடமறுக்கும்

          கியுஎம்சி வாயிலிலே – நீண்ட

          கியூவிலே கன்னிகள் கூட்டம்

                    குயிலால் அவள்வரவை நோக்கி

                    குழலாய் நின்றிருப்பேன்.

          முல்லைப்பூ வாங்கி

          முள்மீது நடந்து – நான்

                    தில்லைப்பூ கொடுப்பேன் – அவள்

                    இல்லைப்பூ வென்பாள்

          கண்கள் காதல்பேசும் – கை

          விரல்கள் உறவுபேசும் – இரு

                    மனங்கள் ஒன்றாகும் – ஆங்கே

                    தண்டமிழ் மணமாகும்

          பிறப்பினில் மலையாளம் – நான்

          பிறப்பினில் தமிழாளும் – கண்

                    சிறப்பினில் கவிதைகள் -நல்

                    உறவினில் பிறந்திடும்

          கடற்கரை மணலெல்லாம் – எங்கள்

          காலடிரேகை காட்டும்

                    படகோர நிழலெல்லாம் – எங்கள்

                    பாவியம் பாடிமகிழும்

          சன்னல் என்முகம் பார்க்கும் – பின்

          நிலவு அதில் தோன்றும்

                    சன்னல் இதழ் திறக்கும் – என்

                    சலனம் அதில் தோன்றும்

          சுகலோக வாழ்வினிலே

          அகலாய் நின்றவள்நீ

                    நகம்நோக நின்றாலோ

                    சதையாக நின்றேனே

          மலையாளி என்பதாலே

          மலையைக் காட்டிவிட்டாள்

                    விலையாகிப் போகுமுன்னே

                    விலகிப் போய்விட்டாள்

          மழைவரு வதென்று – வாடை

          அழைத்துச் செல்ல – குடை

                    வேண்டும் என்று இடையாள்

                    எடுத்துச் சொன்னாள்.

          பகலைத் தேடி நான்

          பலகாலம் நின்றிருந்தேன் – அவளோ

                    இரவையே தேடுகின்றாள் – அதிலென்

                    உறவையே நாடுகின்றாள்

          விடுப்பு வேண்டுமென்றால்

          கடுப்பு காட்டுகின்றாள்

                    கறுப்பு வரட்டுமென்று

                    பகலை விரட்டுகின்றாள்

          அடுப்பே வெம்மையென்று

          கடுப்பாய் இருந்துவிட்டாள் – இன்று

                    அணைப்பே சுகமென்று

                    அணையை திறந்துவிட்டாள்.

          அடியெடுத்துக் கொடுக்கின்றாள்

          துடியெழுத் தாகின்றாள் – அவள்

                    விடியலைத் தேடுகின்றாள் – நான்

                    மடியலை நாடி நின்றேன்.

          கடுக்காய் இனிக்குதடி – உன்

          கடுமையான பார்வையிலே – என்

                    நடுக்கம் போனதடி – உன்

                    தடுப்புச் சுவரினாலே.

          நிழல்பட்ட இடமெல்லாம்

          நிஜமாகவே தோணுது – அவள்

                    போய்விட்டாள் என்பதுவோ

                    மறந்தே போனது.

          அழமட்டும் தோன்றாது

          ஆழமாய் வாழாது – அவள்

                    மேலோட்டமாய் இருந்துவிட்டாள் – இன்று

                    தேரோட்டமாய் ஆகிவிட்டேன்.

          யாழ்மீட்டும் விரல்களிலே

          நாமீட்டித் தந்தாள் – அதில்

                    பாவெடுத்துக் கொடுத்தாள் – இன்று

                    பாவாகி நிற்கின்றாள்.

          ஆள்மட்டும் தெரியாமல்

          ஆணை இடுகின்றாள் – என்

                    சேனை அவிழ்க்கின்றாள் – அதில்

                    தாளை நிரப்புகின்றாள்.

          கலைதீட்டும் கண்ணாளோ

          மலைமுட்டச் சிலையானேன் – அவள்

                    நிலைமூட்டக் கனியானேன் – இன்று

                    அலைதொட்ட கவியானேன்.

          நிதம்பார்க்கும் பார்வையிலே

          இதமாய் இருந்திருந்தாள்

                    சதைமேல் ஆசைவைத்தாள் – நானோ

                    பதைக்க அனுப்பிவிட்டேன்.

          மனையாட்டி  வாழ்வில்

          எனைவாட்ட வந்தாள்

                    வினையாற்றும் போழ்தில்

                    எனைவிட்டுப் போனாள்.

          என்னை வாட்ட எண்ணி

          தன்னை வாட்டிக் கொண்டாள்

                    மண்ணை வாழ்த்த எண்ணி

                    மண்ணுக்குள் வாழுகின்றாள்.

          இதயம் தூங்கிட

          இதம்பல நாடிட

                    தூங்க நினைத்தேன் – அவள்

                    நினைவோ தூங்கவில்லை.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்