இங்கிதங்கள்

             மிச்சமிலா வாழ்வெய்தும் நாயகனும் எப்பவும்

முச்சந்தி பேசியிருக்க மாட்டானே

          கச்சையிலே அழகூட்டும் நாயகியும் எப்பவும்

                    இச்சைக்கு ஆளாக மாட்டாளே

          நிச்சயித்த ஆண்மகனே கணவனென்று எப்பவும்

                    அச்சாகும் அழைப்பிதழை பார்ப்பாளே

          நச்சுடைய பேச்சுக்கள் வந்தாலும் எப்பவும்

                    சுத்தாது மனநிலை காப்பாளே.

 

          சந்தியாவும் நாங்கள் பெறும் தத்துவங்களே – அதை

சத்தியத்தின் புத்தகத்தில் ஏற்றுங்களேன்

          அந்தியாவும் நாங்கள் தேடும் சோலைகளும் – எப்பவும்

                    அந்தப்புரம் ஆவதில்லை காணுங்களேன்.

          பந்தியாவும் பலகாரச் சின்னங்களே – எப்பவோ

                    படத்திலே பார்த்ததாய் எண்ணங்களே

          இந்தியாவும் பலகால வண்ணங்களே – இருப்பினும்

                    இங்கிதத்தில் சிக்கிக் கொண்ட கன்னங்களே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்