என் சுகாதாரம்


        அன்புள்ளம் கொண்டவளே – என்

உயிரின் ஆரம்பமே – நீதான்

அதன் ஆதாரமே – அதான்

எனக்கு சுகாதாரமே.

          என்னுள்ளம் நிறைந்தவளே – நன்

                    நினைவின் ஆகாரமே – நீதான்

                    அதன் போதாகாரமே – அதான்

                    எனக்கு வேதாகாரமே.

          முன்பெல்லாம் பேசியவளே – உன்

                    முப்பேஎன் ரீங்காரமே – நீதான்

                    அதன் காகாவரமே – அதான்

                    எனக்கு பேருபகாரமே.

          தென்மொழியின் தலைமகளே – உன்

                    தேன்மொழியில் மமகாரமே – நீதான்

                    அதன் விவகாரமே – அதான்

                    எனக்கு வெறுஞ்சாரமே.

          பெண்ணுள்ளம் கொண்டவளே – என்

                    அன்பின் மூலாதாரமே – நீதான்

                    அதன் வேராதாரமே – அதான்

                    எனக்கு நீராகாரமே.

          கண்ணில்லம் கொண்டவளே – என்

                    கவியின் ஊற்றாதாரமே – நீதான்

                    அதன் பீற்றாதாரமே – அதான்

                    எனக்கு பிதற்றாதாரமே.

          மண்ணில் நிலவானவளே – என்னில்

                    இல்லை அகங்காரமே – நீதான்

                    அதன் ஓங்காரமே – அதான்

                    எனக்கு என்றும் நீதாரமே.

          ஆண்டாளின் வடிவாளே – என்

                    ஆசையின் பொருளாதாரமே – நீதான்

                    அதன் உருவாதாரமே – அதான்

                    எனக்கு நிலையாகாரமே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்