தமிழ் மணம்

 


        விழிநிலவைத் திண்ணும் மூக்கு

நுனிகிளியை ஒக்கும் – அவள்

நிழலோ மலரைப் பூக்கும் – ஆயினும்

உந்தன் நிழலாகுமோ – தமிழே

உந்தன் பெயராகுமோ.

          பழியறியா பாதம் – அவள்

                    கழிபடா நாதம் – என்றும்

                    சுதிமீறா தாளம் – ஆயினும்

                    சதியாளும் நீயாகுமோ – தமிழே

                    உந்தன் நிலை மாறுமோ.

          மதியாகும் அழகு – உன்

                    நதியாகும் பேச்சு – அதில்

                    விதியாடும் ஊஞ்சல் – என்றாலுமுன்

                    தேனூறும் பேச்சாமோ – தமிழே

                    உந்தன் பேச்சாமோ.

          நதியோரம் சோலை – அவள்

                    விழியோரம் மாலை

                    தினந்தோறும் பூக்கும் – இருப்பினும்

                    மணம் தரும் உன் மலராமோ – தமிழே

                    உந்தன் மணமாமோ.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்