கதலியாகுவாயே…!

 கடவுளிங்கே ஒருவனடா – அதைக்

கூறு போட்டவன் மனிதனடா

இடமளிக்கும் கடவுளுக்கு – உன்

இதயத்தில் இடம் கொடடா.

 

மொழி வளர்க்கும் மனிதனடா – இவன்

மொழிவதை நின்று கேளடா

சுயம்வரத்தில் நின்மொழியை – நீ

நயமாய் என்றும் பரப்பிடடா.

 

உறங்காத காற்றும்கூட உறங்கும்

உன்னிடத்தில் உறைந்ததில்லை

இறக்குமிந்த உடலுக்கு – நித்தம்

அலங்காரம் தேவை தானோ?

 

ஆயிரம் தெய்வங்கள் உண்டுங்கே ஆயினும்

மாதா பிதாவுக்கு ஈடில்லையே

பாயிரம் உனக்கு பாடிடவே – நீ

தாயான வாழ்க்கையை வாழ்ந்திடடா.

 

புலன்கள் ஐந்தும் ஒன்று பட்டாலே – உன்

நலன்கள் எல்லாம் நாட்டுக்கடா

இல்லங்கள் உனக்குச் சொந்தமடா – அதில்

இனங்கள் எதுவும் இல்லையடா.

 

கதலியாய் என்றுனை ஆக்கிக்கடா – உனக்கு

கதவுகள் ஆயிரம் திறந்திருக்கும்.

உதவியாய் என்றுனை ஆக்கிக்கடா – உனக்கு

உதவிகள் ஆயிரம் மடைதிறக்கும்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்