நீயும் நானும்

 நெஞ்சிருக்கும் வரையிலே

          நினைவினிலே – நீ இருப்பாய்

                    ஏ…க்கம் இதுஎன் ஏ…க்கம்.

 

நினைவினிலே நீயிருந்தால்

          நெஞ்சினிலே யாரிருப்பாள்

                    தாகம் இது உன் தா…கம்.

 

மனதினிலே நீயிருந்தால்

          கனவினிலே யார் வருவாள்

                    சொல்லு… ஏ… என் கண்ணே

 

இரவினிலே தூக்கமில்லே

          இருந்தாலும் தூக்கம் வரலே

                    ஏனோ… அது … ஏனோ?

 

நீர் விழியில் நீயிருக்க

          கடல் நீரில் நானிருக்க

                    ஏனோ… இது… ஏனோ?

 

நிலவினிலே நீயிருக்க

          நிலத்தினிலே நானிருப்ப

                    தேனோ … இது… ஏனோ?

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்