சுகவரிகள்…?
கார்காலமே – அது
– உனக்காகத்தான்
கலங்காதேடி –
என் – கண்மணி.
பூவண்டு
தூங்குவதும் – உன்
கூந்தல்
மலரிலேதான்
தேன்வந்து
சேர்ந்ததும் – உன்
தேவழகில்
மயங்கிடத்தான்.
அத்தைக்கு
மகளே – என்
சொத்துக்கு
நீதாண்டி
நந்தைக்குப்
பிறந்தவளே - நீ
நித்தமழுது
சாவாதேடி.
மல்லிகைப்பூ
வாசனைக்கு – நீ
மன்மதனை
நினைத்திருந்தாய்
எங்கோ
சுற்றிய கொடிமல்லி – இன்று
உன்
காலைச் சுற்றுதடி.
தாளிப்பு
வாசனைக்கே – பலர்
தாலிகட்ட
காத்திருக்க
அருகம்புல்
முடிகாரன் – ஒருநாள்
சமையல்
சுவைத்தானேடி.
அழகுக்கு
நகையணிந்தாய் – இந்த
இதழுக்கு
வேண்டாமென்றேன்.
வழக்குக்கு
நீயென்று – நித்தம்
உலகுக்கு
சொல்லுகின்றேன்.
நாளுக்கொரு
தாள்கிழித்து
அவனைநீ
பார்க்கின்றாய்
நாளுக்கொரு
வாரம்தள்ளி – இவன்
வந்திடவே
துடித்திருப்பான்.
சோலைக்குள்
தனியாய்நீ
உலாவும்
போது
சோதாக்கள்
பலருன்னை
சிவனுடையவள்
என்கின்றார்.
பதிவிரதை
உன்னழகில்
பாரதத்தைக்
கண்டவன்
பாதைமாறி
போவானென்று
நினைப்பதும்
தவறன்றோ.
விதிமுறையால்
பிரிந்திருந்தால் – நீ
சதியென்று
நினைப்பாயோ
வழியின்றிப்
போனவனுக்கு
வழிமூட
மறந்தாயே.
தடியூன்றி
நடந்தேனும்
தொடர்ந்துன்னை
வந்தடைவேன்
படியேறி
வரும்முன்னே – நீ
முடிமுந்திரி
ஆவாய்பார்.
வருமொழியில்
இவன்பெயரை
வரவேற்பு
செய்தவள்நீ
நிலையாக
அப்பெயரை
காத்திடுவேன்
மறவாதே.
சிறுமொழியும்
இவன்மீது
சிறுமையுடன்
பேசாதே
வறுமையிலும்
உன்நினைவால்
வாழ்பவன்
இவனன்றோ.
பெருமையாய்
வாழ்வதற்கு – நீ
பொறுமையாய்
இருந்துவிடு
கருமையாய்
இருந்தாலும் – இவன்
கண்ணுக்கு
நீதாண்டி.
எறும்புப்
புற்றாக
அரும்பும்
ஆசைகளை
குறும்புப்
பேச்சாலே – இவன்
குறிப்பிடும்
மாதவனடி.
உயிர்பாதி
உன்னிடத்தில்
நிலையாக
விட்டுவிட்டு
தயிர்போல
உன்எண்ணம்
தலும்பிட
செய்துவிட்டேன்.
புதிர்போல
நீவாட
விடைசொல்ல
வருவேண்டி
பதரான
உன்னெண்ணம்
பக்குவமாய்
வையேண்டி.
நிச்சயம்
உன்னையிவன்
நிச்சயம்
செய்வாண்டி
பக்குவமாய்
சமைத்துப்போட
பாக்குவெத்தலை
மாத்துவாண்டி.
என்மூக்கின்
வாசமே – உன்
இதயத்
துடிப்பன்றோ
என்
நாக்கின் ஈரமோ – உன்
இன்பப்
பேச்சன்றோ.
முகவரி
இருந்தது
சுகவரிகளை
எழுதினேன்…
முகவரியை
இழந்ததால்
சுகவரிகள்…?
Comments
Post a Comment