குழந்தை

             குமுத வாய் திறந்து

குழந்தை சிரிக்கும் – அந்தச்

சிரிப்பினிலே பலப்பல

சிரிப்பொலி பிறக்கும்.

          அமுத வாய் திறந்து

                    குழந்தைமொழி பேசும் – அந்தப்

                    பேச்சினிலே பலப்பல

                    மொழிகள் பிறக்கும்.

          தமதென்று நினைக்கும் போது

                    தன்மையுணர் வடைகிறது

                    உண்மையுணர் கிறபோது

                    உரிமைப்பேச் செடுக்கிறது.

          சமதர்ம நாட்டினிலே

                    சமத்துவம் பேசிவிட்டு

                    மமத்துவம் பேசுபவரை

                    சம்மட்டியால் அடிக்கிறது.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்