சலவை மூளை
சலவைக்கு மூளையைக்
கொடுத்துவிட்டு
செலவுக்கு
நித்தமும் திண்டாடுறோம்
கவலைக்கு
மருந்து தேடாமலே
கவலை
கவலை என்றாடுறோம்
தவளையின்
வாழ்வை உணராமலே
தரிகிடதம்
போடும் மானிடரே
குவளையில்
நிறைந்த நீரிருக்க
பாலையில்
கிணறு தோண்டலாமோ?
மலையைப்
புறட்டும் மானிடரே – உன்
மகோன்னத
மென்ன மாண்டிடிச்சா
சிலையைத்
திருடி சீமைக்கு விற்கு
சீமைச்
சரக்கில் மாய்ந்திட லாமோ
சிலைமாதர்
நிலைமாற கொலைமா னாக்கி – உன்
வலைக்கு
முடிச்சைத் தேட லாமோ
அலைக்குள்
மனதைச் செலுத்தி விட்டால்
இலைச்சோறு
சுவையை தந்திடுமோ.
Comments
Post a Comment